This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

கடைக்குட்டி

திருவாரூரில் கிருபானந்தவாரியார் பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி சொல்ல வேண்டி வந்தது. " சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். கரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை :) அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான் . என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்."

இவ்வாறு விளக்கிய வாரியார்.. கூட்டத்தினரை பார்த்து " இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா ?" என்று கேட்டார். 10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று தாங்கள் கடைக்குட்டிகள் என்றார்கள்.

வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. " உட்காருங்கப்பா! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு விவஸ்தையே கிடையாதா? அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ :)) வீட்டுக்கு போய் உதை வாங்காதீங்கப்பா" என்றார். எல்லோரும் வாய் விட்டு சிரித்தார்கள். குழந்தைகளும் தாங்கள் எத்தனையாவது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் வீடு சென்றனர்.

(நன்றி : சுகி.சிவம் )

6 கருத்து(க்கள்)

Blogger மாயவரத்தான் சொன்னது�...

:D

 

Blogger Unknown சொன்னது�...

என்னையும் ஒரு 'ஞானி' என வாரியார் சொல்லியிருக்கிறார் என அறியத்தந்தமைக்க்கு நன்றி :o)

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

துபாய்வாசி,

//வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. " உட்காருங்கப்பா! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு விவஸ்தையே கிடையாதா? அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ :)) வீட்டுக்கு போய் உதை வாங்காதீங்கப்பா" என்றார்.//

:-)))

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

நல்ல கதையா இருக்கே? :-))))

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

அடுத்தப் பதிவு எப்போது?

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

குமரன்,

கூடிய விரைவில் பதிக்கிறேன்.

 

நீங்க சொல்லுங்க

<< முகப்பு�