அறிவிப்பு
திருமுருக கிருபானந்த வாரியாரின் அருமையான சொற்பொழிவுகளைப் பற்றியும் அவரின் வள்ளல் குணத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள துவங்கப்பட்ட இந்த வலைப்பதிவில் பல்வேறு இடங்களில் இருந்து உரை/ஒலி/காணொளி போன்றவற்றை தொகுத்து இலவசமாக பகிர்ந்து வந்தோம்.
அவ்வகையில் ஆனந்தா ஒலிநாடா நிறுவனத்தின் ஒலிநாடா அட்டையில் இடம் பெற்ற சில உரைகளையும் ஆனந்தா காணொளி வட்டில் இடம்பெற்ற ஒரு காணொளித் துண்டையும் இந்த வலைப்பதிவில் பகிர்ந்து இருந்தோம்.
இது தொடர்பாக மேலும் சில காணொளித் துண்டுகளை (கவனிக்க: முழு காணொளியையும் அல்ல) இந்த வலைப்பதிவில் இலவசமாக பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஆனந்தா ஒலிநாடா நிறுவனத்தைச் சேர்ந்த உயர்திரு. M.கோடிலிங்கம் (இவர் கிருபானந்த வாரியாரின் தம்பி மகன்) அவர்களிடம் வாரியாரின் சீடர் தருமபுரி குமாரசுவாமிப்பேட்டையை சேர்ந்த புலவர் உயர்திரு. க.தியாகசீலன் அவர்கள் மூலமாக செல்பேசியில் ஓராண்டுக்கு முன் தொடர்பு கொண்டு அனுமதி கேட்ட போது அவர் ஆட்சேபம் தெரிவித்தார். அதனால் அந்த உரையாடலுக்குப் பின் ஆனந்தா ஒலிநாடா நிறுவனத்துக்கு காப்புரிமை உள்ள எந்த ஒரு உரையையோ அல்லது ஒலி/காணொளித் துண்டுகளையோ இந்த வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளவில்லை.
இதுவரையில் இந்த வலைப்பதிவில் பகிர்ந்து கொண்ட உரை/காணொளி குறித்து அவர் ஏதும் குறிப்பிடாததால் அவற்றை அப்படியே விட்டு வைத்திருந்தோம். இந்நிலையில் இன்று (11 ஜூன் 2009 ) உயர்திரு. M.கோடிலிங்கம் அவர்கள் யூடியூப் நிறுவனத்தில் இது குறித்து காப்புரிமை மீறல் புகார் தெரிவித்திருப்பதால் ஆனந்தா ஒலிநாடாவின் காப்புரிமை அடங்கிய (உரை/ஒலி/காணொளி உட்பட) அனைத்து இடுகைகளையும் இந்தப் பதிவில் இருந்து நீக்கி இருக்கிறோம்.
இந்தப் பதிவில் உள்ள மற்ற இடுகைகளில் பதிவுரிமை மீறல் ஏதும் இருப்பின் எங்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் அவற்றை நீக்கலாம்.
இனி வரும் நாட்களில் இந்த வலைப்பதிவின் இடுகைகளில் யாருக்கும் பதிவுரிமை இல்லாத அல்லது உரிய அனுமதி பெற்ற உரை/காணொளி மட்டுமே வெளியிடப்படும்.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளைப் பற்றி நம் தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் பகிர்ந்து கொள்ள துவங்கப்பட்டதே இந்த வலைப்பதிவு. யாருடைய காப்புரிமையையும் மீறுவதோ அல்லது இந்த வலைத்தளம் மூலம் பொருளாதார ரீதியிலோ வேறெந்த வகையிலுமோ தனிப்பட்ட பயன் அடைவது நம் நோக்கம் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.



2 கருத்து(க்கள்)
-
kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது�...
-
-
-
தகடூர் கோபி(Gopi) சொன்னது�...
-
-
நீங்க சொல்லுங்கஉம்ம்ம்...சரி பரவாயில்லை கோபி! காணொளி இல்லாமல் படங்கள் மற்றும் உரிய உரையாடலைத் தட்டச்சியாவது, வாரியார் அமுதத்தைத் தொடருவோம்!
பின்னாளில் என்றேணும் ஒரு நாள், வாரியார் தமிழ் நாட்டுடைமை ஆகட்டும்!
KRS,
தாமதமாக உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டமைக்கு மன்னிக்க. ஊருக்கு சென்றிருந்ததால் மின்னஞ்சல்களை கவனிக்க இயலவில்லை.
பல பொது நிகழ்ச்சிகளில் வாரியார் சொற்பொழிவுகள் நடைபெற்று அவற்றை சில தனிப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் ஒலி/ஒளிப்பதிவு செய்து பதிவுரிமை செய்யாமல் பாதுகாக்கின்றனர்.
அவர்களை தேடிக் கண்டுபிடித்து (கடவுள் விருப்பம் அதுவானால்) அந்த காணொளிகளை அவர்களின் முன் அனுமதியோடு இங்கே வெளியிடுவோம்.
//பின்னாளில் என்றேணும் ஒரு நாள், வாரியார் தமிழ் நாட்டுடைமை ஆகட்டும்!//
உம்ம்ம்ம்.... வாரியார் இந்த உலகுக்கே உரித்தானவர், தனிப்பட்ட யாருக்கும் உரியவர் அல்ல என்பதை தொடர்புடைய எல்லோரும் உணர்ந்தால் மகிழ்ச்சியே.