This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

அறிவிப்பு

வருகையாளர்களுக்கு வணக்கம்.

திருமுருக கிருபானந்த வாரியாரின் அருமையான சொற்பொழிவுகளைப் பற்றியும் அவரின் வள்ளல் குணத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள துவங்கப்பட்ட இந்த வலைப்பதிவில் பல்வேறு இடங்களில் இருந்து உரை/ஒலி/காணொளி போன்றவற்றை தொகுத்து இலவசமாக பகிர்ந்து வந்தோம்.

அவ்வகையில் ஆனந்தா ஒலிநாடா நிறுவனத்தின் ஒலிநாடா அட்டையில் இடம் பெற்ற சில உரைகளையும் ஆனந்தா காணொளி வட்டில் இடம்பெற்ற ஒரு காணொளித் துண்டையும் இந்த வலைப்பதிவில் பகிர்ந்து இருந்தோம்.

இது தொடர்பாக மேலும் சில காணொளித் துண்டுகளை (கவனிக்க: முழு காணொளியையும் அல்ல) இந்த வலைப்பதிவில் இலவசமாக பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஆனந்தா ஒலிநாடா நிறுவனத்தைச் சேர்ந்த உயர்திரு. M.கோடிலிங்கம் (இவர் கிருபானந்த வாரியாரின் தம்பி மகன்) அவர்களிடம் வாரியாரின் சீடர் தருமபுரி குமாரசுவாமிப்பேட்டையை சேர்ந்த புலவர் உயர்திரு. க.தியாகசீலன் அவர்கள் மூலமாக செல்பேசியில் ஓராண்டுக்கு முன் தொடர்பு கொண்டு அனுமதி கேட்ட போது அவர் ஆட்சேபம் தெரிவித்தார். அதனால் அந்த உரையாடலுக்குப் பின் ஆனந்தா ஒலிநாடா நிறுவனத்துக்கு காப்புரிமை உள்ள எந்த ஒரு உரையையோ அல்லது ஒலி/காணொளித் துண்டுகளையோ இந்த வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளவில்லை.

இதுவரையில் இந்த வலைப்பதிவில் பகிர்ந்து கொண்ட உரை/காணொளி குறித்து அவர் ஏதும் குறிப்பிடாததால் அவற்றை அப்படியே விட்டு வைத்திருந்தோம். இந்நிலையில் இன்று (11 ஜூன் 2009 ) உயர்திரு. M.கோடிலிங்கம் அவர்கள் யூடியூப் நிறுவனத்தில் இது குறித்து காப்புரிமை மீறல் புகார் தெரிவித்திருப்பதால் ஆனந்தா ஒலிநாடாவின் காப்புரிமை அடங்கிய (உரை/ஒலி/காணொளி உட்பட) அனைத்து இடுகைகளையும் இந்தப் பதிவில் இருந்து நீக்கி இருக்கிறோம்.

இந்தப் பதிவில் உள்ள மற்ற இடுகைகளில் பதிவுரிமை மீறல் ஏதும் இருப்பின் எங்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் அவற்றை நீக்கலாம்.

இனி வரும் நாட்களில் இந்த வலைப்பதிவின் இடுகைகளில் யாருக்கும் பதிவுரிமை இல்லாத அல்லது உரிய அனுமதி பெற்ற உரை/காணொளி மட்டுமே வெளியிடப்படும்.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளைப் பற்றி நம் தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் பகிர்ந்து கொள்ள துவங்கப்பட்டதே இந்த வலைப்பதிவு. யாருடைய காப்புரிமையையும் மீறுவதோ அல்லது இந்த வலைத்தளம் மூலம் பொருளாதார ரீதியிலோ வேறெந்த வகையிலுமோ தனிப்பட்ட பயன் அடைவது நம் நோக்கம் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

2 கருத்து(க்கள்)

Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது�...

உம்ம்ம்...சரி பரவாயில்லை கோபி! காணொளி இல்லாமல் படங்கள் மற்றும் உரிய உரையாடலைத் தட்டச்சியாவது, வாரியார் அமுதத்தைத் தொடருவோம்!

பின்னாளில் என்றேணும் ஒரு நாள், வாரியார் தமிழ் நாட்டுடைமை ஆகட்டும்!

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

KRS,

தாமதமாக உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டமைக்கு மன்னிக்க. ஊருக்கு சென்றிருந்ததால் மின்னஞ்சல்களை கவனிக்க இயலவில்லை.

பல பொது நிகழ்ச்சிகளில் வாரியார் சொற்பொழிவுகள் நடைபெற்று அவற்றை சில தனிப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் ஒலி/ஒளிப்பதிவு செய்து பதிவுரிமை செய்யாமல் பாதுகாக்கின்றனர்.

அவர்களை தேடிக் கண்டுபிடித்து (கடவுள் விருப்பம் அதுவானால்) அந்த காணொளிகளை அவர்களின் முன் அனுமதியோடு இங்கே வெளியிடுவோம்.

//பின்னாளில் என்றேணும் ஒரு நாள், வாரியார் தமிழ் நாட்டுடைமை ஆகட்டும்!//

உம்ம்ம்ம்.... வாரியார் இந்த உலகுக்கே உரித்தானவர், தனிப்பட்ட யாருக்கும் உரியவர் அல்ல என்பதை தொடர்புடைய எல்லோரும் உணர்ந்தால் மகிழ்ச்சியே.

 

நீங்க சொல்லுங்க

மடத்துவாசல் பிள்ளையாரடி: ஈழம் வந்த வாரியார்

0 கருத்து(க்கள்)

நீங்க சொல்லுங்க

கடைக்குட்டி

திருவாரூரில் கிருபானந்தவாரியார் பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி சொல்ல வேண்டி வந்தது. " சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். கரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை :) அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான் . என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்."

இவ்வாறு விளக்கிய வாரியார்.. கூட்டத்தினரை பார்த்து " இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா ?" என்று கேட்டார். 10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று தாங்கள் கடைக்குட்டிகள் என்றார்கள்.

வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. " உட்காருங்கப்பா! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு விவஸ்தையே கிடையாதா? அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ :)) வீட்டுக்கு போய் உதை வாங்காதீங்கப்பா" என்றார். எல்லோரும் வாய் விட்டு சிரித்தார்கள். குழந்தைகளும் தாங்கள் எத்தனையாவது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் வீடு சென்றனர்.

(நன்றி : சுகி.சிவம் )

7 கருத்து(க்கள்)

Blogger மாயவரத்தான்... சொன்னது�...

:D

 

Blogger துபாய்வாசி சொன்னது�...

என்னையும் ஒரு 'ஞானி' என வாரியார் சொல்லியிருக்கிறார் என அறியத்தந்தமைக்க்கு நன்றி :o)

 

Blogger கோபி(Gopi) சொன்னது�...

துபாய்வாசி,

//வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. " உட்காருங்கப்பா! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு விவஸ்தையே கிடையாதா? அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ :)) வீட்டுக்கு போய் உதை வாங்காதீங்கப்பா" என்றார்.//

:-)))

 

Blogger நன்மனம் சொன்னது�...

:-)

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

அடுத்தப் பதிவு எப்போது?

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

நல்ல கதையா இருக்கே? :-))))

 

Blogger கோபி(Gopi) சொன்னது�...

குமரன்,

கூடிய விரைவில் பதிக்கிறேன்.

 

நீங்க சொல்லுங்க

கயிலாயத்தில் ஒரு நாள்

வாரியார் சொற்பொழிவிலிருந்து..



ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:

குடும்பத்திலே மூத்த பிள்ளை கிட்ட அப்பாவுக்கு பாசம்... கடைசி பிள்ளை கிட்ட அம்மாவுக்கு நேசம்.

அவன் ஜேஷ்ட குமாரன் என்று அப்பா சொல்லுவார்... இது கடைகுட்டின்னு சொல்லுவா அம்மா.

ஒன்னு முதலா பொறக்கனும்... ஒன்னு கடசியா பொறக்கனும்... இடபட்டா பொறந்தா என்னைக்கும் ஆபத்து.

ஒரு மந்திரமே வரும்...

"ஓம் பார்வதீ ப்ரிய நந்தனாய நமஹ"

பார்வதிக்கு ப்ரியமான குழந்தை என்று...

சிவபெருமான் அருகிலே விநாயகர் அமர்ந்தார்... தேவியின் அருகிலே முருகப் பெருமான் அமர்ந்தார்...

அப்படி இரண்டு குழந்தைகளும் வீற்றிருக்கிற பொழுது, விநாயகப் பெருமான் தந்தையாரைப் பார்த்து "அப்பா என் காதை தம்பி கிள்ளினான்".

"முருகா! ஏன் அண்ணா காதை கிள்ளினே?"

"இல்லைப்பா, இவ்வளோ பெரிய காது மொரம் போல இருக்குதே"

அண்ணா மந்திரத்திலே ஒரு மந்திரம்
"ஓம் சூர்ப்பகர்ணாய நமஹ"

பெரிய காதா இருக்குதேன்னு கிள்ளிப் பாத்தேன்னாரு.

"முருகா, பிறவிப் பெருங்கடலிலே வீழ்ந்தவர்களுக்கு உன் அண்ணனாகிய விநாயகனுடைய திருவடியாகிய படகைப் பற்றிக்கொண்டால் சீக்கிரமாக முக்திக்கரையை சேர்வதற்கு காற்று எறிவது அந்த கஜ கர்ணம்".

இது மகத்தான தத்துவம். செவி விசாலமாக இருந்தால் காற்றை எறியும்.

"அப்படியாக உன் அண்ணா பெரிய காதைப் படைத்திருக்கிறான். நீ ஃபிரியான காதை கிள்ளினையே ஏன்டா கிள்ளின?"ன்னாரு.

"அப்பா, நீ என் மேலே கோபிக்கற, அண்ணா என் கண்ணை எண்ணி எண்ணிப் பாக்குறான்".

முருகனுக்கு பதினெட்டுக் கண்கள், அந்த கண்களை விநாயகர் எண்ணினார்.

"விநாயக மூர்த்தீ, ஏன் தம்பி கண்ணை எண்ணினே?".

"அப்பா, அவன் என் தும்பிக்கை நீளத்தை மொழம் போட்டுப் பாக்குறான். என் தும்பிக்கை என்ன வேட்டியா சேலையா மொழம் போட்டு பாக்கறதுக்கு? அதனாலதான் கண்களை எண்ணினேன்"னாரு

இப்படி முருகப் பெருமானும் விநாயகப் பெருமானும் அந்த இளமைப்பருவத்திலே ஒருவரை ஒருவர் அணுகி விளையாடுகிறார்கள்

இதையெல்லாம் பார்த்த சிவபெருமான் உமாதேவியாரை கடைக்கண்ணால் பார்த்து "உன் குழந்தைகளுடைய சேட்டையை பாரு"

இந்தக் கருத்தை சிவப்பிரகாச சுவாமிகள்

அரனவனிடத்திலே ஐங்கரன் வந்து தன் ஐய என் செவியை மிகவும்
அறுமுகவன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும் அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே அண்ணன் என் சென்னியில் விளங்கு கண் எண்ணினான் என
வென்றிடும் பிள்ளையைப் பார்த்து நீ அப்படியும் விகடம் ஏன் செய்தாய் என
மருவும் என் கை நீளம் முழம் அளந்தான் என்ன மயிலவன் நகைத்து நிற்ப
மலையரயன் உதவவரும் உமையவளை நோக்கி நின் மைந்தரைப் பாராய் என
கருதரிய கடலாடை உலகு பெறந்தம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி
கணபதியை அருகணைத்து அகமகிழ்ந்து கொண்ட களிப்புடன் உமைகாக்கவே


என்று சிவப்பிரகாச சுவாமிகள் அற்புதமாகப் பாடுகிறார்.

4 கருத்து(க்கள்)

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

இந்தக் கதையை வாரியார் சுவாமிகள் சொல்லி நேரில் கேட்டிருக்கிறேன். மிக்க நகைச்சுவையான கதையும் பாடலும். :-)

சிவபிரகாச சுவாமிகளின் பாடலையும் எழுத்தில் இட்டிருக்கலாமே. அவ்வளவு கடினமாக இல்லையே?

முதல் குழந்தை மேல் தந்தைக்குப் பாசம்; கடைக்குட்டி மேல் தாயாருக்குப் பாசம் என்று இங்கே சொல்லியிருக்கிறார் வாரியார். இன்னொரு இடத்தில் முதல் குழந்தை மேல் தாய்க்குப் பாசம்; ஏனெனில் தான் மலடி இல்லை என்று நிறுவியதற்காக; கடைக்குட்டி மேல் தந்தைக்குப் பாசம்; ஏனெனில் தான் இன்னும் ஆண்மகன் தான் என்று நிறுவியதற்காக என்று வாரியார் சொல்லுவார். :-)

இன்னொன்றையும் கவனிக்கலாம். உமாதேவியாரால் படைக்கப்பட்டவர் பிள்ளையார். ஐயன் நெற்றிக்கண்களில் இருந்து உதித்தவர் கந்தன். ஆனால் அமரும் போது ஐயன் அருகில் ஐங்கரனும் அம்மை அருகில் ஆறுமுகனும் அமருவதைப் பாருங்கள். :-)

 

Blogger கோபி(Gopi) சொன்னது�...

குமரன்,

//சிவபிரகாச சுவாமிகளின் பாடலையும் எழுத்தில் இட்டிருக்கலாமே. அவ்வளவு கடினமாக இல்லையே?//

பாடலை கேட்டு எழுதும் போது எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் ஒவ்வொரு வரியும் எங்கு முடிகிறது என தெரியாததாலும் பாடலை தவிர்த்து வந்தேன்.

பாடலை பதித்துள்ளேன். பிழையிருந்தால் சொல்லுங்கள் திருத்திவிடுகிறேன்.

பாசம் குறித்து உங்கள் விளக்கம் அருமை.

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

சிறு பிழைகள் இருந்தன. சரியான பாடலை இங்கே தந்துள்ளேன்.

அரனவனிடத்திலே ஐங்கரன் வந்து தன் ஐய என் செவியை மிகவும்
அறுமுகவன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும் அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே அண்ணன் என் சென்னியில் விளங்கு கண் எண்ணினான் என
வென்றிடும் பிள்ளையைப் பார்த்து நீ அப்படியும் விகடம் ஏன் செய்தாய் என
மருவும் என் கை நீளம் முழம் அளந்தான் என்ன மயிலவன் நகைத்து நிற்ப
மலையரயன் உதவவரும் உமையவளை நோக்கி நின் மைந்தரைப் பாராய் என
கருதரிய கடலாடை உலகு பெறந்தம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி
கணபதியை அருகணைத்து அகமகிழ்ந்து கொண்ட களிப்புடன் உமைகாக்கவே

 

Blogger கோபி(Gopi) சொன்னது�...

பாடலுக்கு நன்றி குமரன்,

அப்படியே நகலெடுத்து ஒட்டியுள்ளேன்

:-)

 

நீங்க சொல்லுங்க