This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

வெள்ளி, செப்டம்பர் 24, 2010

சம்பந்தியும் , குரங்கும் - வாரியார்

நம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை சம்பந்தி என்று சொல்வோம்.
ஆனால் இன்று அதுவும் மருவி
சம்மந்தி என்று ஆகிவிட்டது.

உண்மையில் சம்பந்தி என்றால் சம்- நல்ல , பந்தி: உறவு.
நம் வீட்டிற்கு சம்பந்தி வந்திருக்கிறார் என்றால் நல்ல உறவினர் வந்திருக்கிறார் என்பது பொருள்.
ஆனால் இன்று யாரும் சம்பந்தி என்று அழைப்பதில்லை.
சம்மந்தி என்றே அழைக்கிறோம்.

அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க
அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் சப்பாடு போடுங்க
அம்மா சம்மந்தி சாப்பிட்டு முடிச்சுட்டார் தாம்பூலம் கொடுங்க

என்று வார்த்தைக்கு வார்த்தை சம்மந்தி என்றே சொல்கிறார்கள்.
ஆனால் சம்மந்தி என்ற வார்த்தைக்கு என்ன பொருள்
சம் என்றால் நல்ல. மந்தி என்றால் குரங்கு..

அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க
அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் சாப்பாடு போடுங்க
அம்மா நல்ல குரங்குக்கு தாம்பூலம் கொடுங்க
என்று வார்த்தைக்கு வார்த்தை குரங்கு என்று சொல்கிறோம்.

ஆனால் அவர் அதையும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டு சொல்கிறார்.
எனவே தமிழில் உச்சரிப்பை மாற்றக்கூடாது.

அவ்வையும் தமிழும் என்ற தலைப்பில் வாரியார் பேசியது
கேட்டு பதிந்தது : செல்வ.முரளி

Labels: , ,

4 கருத்து(க்கள்)

Blogger Unknown சொன்னது�...

அருமை

நவம்பர் 15, 2010 9:38 am  

Blogger Anand சொன்னது�...

நமது குருநாதர் வாரியார் சுவாமிகளின் 17 வது குருபூஜை விழா -- 31/10/2010

http://variyarswamigal.blogspot.com/2010/10/17-31102010.html

நவம்பர் 27, 2010 7:47 pm  

Blogger சுந்தரா சொன்னது�...

மந்தி மாதிரி அவ்வப்போது நடந்துக்கிறதால அப்படிக் கூப்பிடுறாங்களோ என்னவோ :)

வாரியாரின் வாய்மொழிகள் அருமை முரளி!

தொடருங்க.

டிசம்பர் 08, 2010 9:25 pm  

Blogger Unknown சொன்னது�...

அடுத்த பதிவு எப்போது

டிசம்பர் 15, 2010 8:50 pm  

நீங்க சொல்லுங்க

<< முகப்பு�