This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

வாரியாரும் சீர்காழியும்

சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மறைவு குறித்து ஒரு மேடையில் வாரியார் சீர்காழி Dr.சிவசிதம்பரம் அவர்களி்ன் முன்னிலையில் பேசியது:



ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:

எப்பவுமே அப்பாவ விட புள்ள ஒயர்வா இருக்காது. அது தான் உலகம்.

எனக்குத் தெரிஞ்சி மூனு பேரு இதுக்கு விதிவிலக்கு.

ஒன்னு முருகன்... சிவனுக்கே உபதேசம் பண்ணவன்.

ஒன்னு அபிமன்னன் (அபிமன்யு)

ஒன்னு ஜவகர்... மோதிலாலை விட...

நாலாவது நம்ம சிவசிதம்பரம்.

சீர்காழியும் நானும் சிவசிதம்பரமெல்லாம் கைலாசத்துக்கு போனோம் விமானத்துல பறந்து... எவரெஸ்ட்க்கு போயிக்கறோம்... யாருக்கும் தெரியாது... லட்ச ரூபா விமானம்...

சிவசிதம்பரம் "தாத்தா... அப்பா ஒரு வார்த்தை கூட சொல்லாம மறைஞ்சுட்டார்..." கண்ணீர் விட்டு கதறி அழுதபோது என் உள்ளம் உருகியது...

நல்ல குடும்பம்.. சீர்காழிக்கு அடக்கம், ஒழுக்கம்... அதுக்கு மேல இங்க ஒருத்தரும் சொல்லலை. ஒழுக்கம் உள்ளவர். ஒழுக்கம் இல்லாமதானே வாலி மாண்டான்... ஒழுக்கம் இல்லாமதானே ராவணன் மாண்டான்...

ரொம்ப சீலம் உள்ளவர். நான் ரொம்ப நிறைந்த உள்ளத்தோடு சொல்றேன்.. சீர்காழிக்கு அடக்கம், பக்தி மட்டுமில்லை ரொம்ப சீரிய ஒரு... ஆண்டவனே! (வருத்தப்படுகிறார்)

சித்திரத்திலே கூட பெண்ணை உற்றுப் பார்க்கமாட்டார்... அப்படி...

மனைவியும் ரொம்ப சுலோவாவே இருந்தது.. வேகமா போகலை... சுலோ... சுலோன்னு... (சீர்காழி கோவிந்தராஜனின் மனைவி பெயர் சுலோச்சனா) ரொம்ப அமைதி... நல்ல குடும்பம்...

அந்த உத்தமமான அன்பர் இப்போது தேவலோகத்திலே போய் அங்கே இருக்கிறவங்களை மகிழ்விக்கிறார்...

நன்றி: சீர்காழி வலைத்தளம்

5 கருத்து(க்கள்)

Blogger சிவா சொன்னது�...

கோபி! இந்த வாரம் வாரியார் பேச்சு கேட்டேன். சீர்காழி என்ற ஒரு மாபெரும் கலைஞனை பற்றி அழகாக பேசி இருக்கிறார். கொடுத்தமைக்கு நன்றி. (எனக்கும் சீர்காழியின் பாடல்கள் ரொம்ப புடிக்கும்)

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களைப் பற்றிய வாரியாரின் மொழிகளைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி கோபி.

 

Blogger ஸ்ருசல் சொன்னது�...

கோபி,

அருமையான, அரிய தகவல்.

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

ஸ்ருசல்.

 

Blogger Ganesh சொன்னது�...

அருமை,நானும் கூட வாரியாரின் ரசிகன்

கணேஷ்

 

Blogger வெற்றி சொன்னது�...

கோபி,
வாரியாரின் உரையைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

 

நீங்க சொல்லுங்க

<< முகப்பு�