This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

மூடனும் கற்பக மரமும்

வாரியார் சொற்பொழிவிலிருந்து..



ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:

ஒரு அறிவில்லாத மூடன்... அறிவுக்கும் அவனுக்கும் 50 மைல் எடவெளி... இப்புடீ நடந்து போறான்... வயிறு முதுவுல ஒட்டிங்குது...

தண்ணீர் விடாய் (தாகம்)... கால் போன வழியாப் போறான்... பகல் 12 மணி... கற்பகமரம் எதிருல வருது... இந்த மூடனுக்கு கற்பக மரம்னு தெரியாது.

தேன் குளிர்ச்சி... ஜிலுஜிலுஜிலுன்னு காத்து... ரெண்டு நிமிடம் ஒக்காந்தான்.

"கொஞ்சம் தண்ணியிருந்தா தேவலை"ன்னான்.

கற்பக மரமோல்லோ? தங்க டம்ளர்ல ஐஸ் வாட்டர்... தகர டம்ளர்லயா குடுக்கும்?

கொஞ்சம் தண்ணீர் பருகினான், "சாப்ட்டு தண்ணி குடிச்சா தேவலை"ன்னான்.

இவ்வளவு பெரிய வாழையிலை... டபுள் வரிசையா காய்கறி, சீரகச் சம்பா பச்சரிசி அன்னம், பருப்பு, அப்ப உருக்குன நெய், மிளகு தக்காளி வத்தக் கொழம்பு, ஆப்பிள் மோர், மோர்க்கொழம்பு, அன்னாசிப்பழம் ரசம், விளாம்பழம் பச்சிடி, ஆரஞ்சு கிச்சடி, பாதாம் கீரு, கட்டித் தயிரு, நெல்லிக்கா ஊருகா,

ஒரு புடி புடிச்சான். அதிகமா உண்டா என்ன தோனும்? "கொஞ்சம் படுத்தா தேவலை... பாயிருந்தா தேவலை"ன்னான்.

பத்தமடை பட்டுப் பாய், வெல்வெட்டு தலகாணி, படுக்க வேண்டியது தானே? மடையன். "கீழ படுத்தா ஓனான் வருமே... அரணை வருமே... கட்டில் இருந்தா தேவலை"ன்னான்.

3 அடி அகலம் 6 அடி நீளம் கட்டில் ஏறிப் படுத்தான். தூங்கவேண்டியது தானே? "கட்டில் அகலமா இல்லையே ஒருவேளை உருண்டு விழுந்துடுவமோ பெரிய கட்டில் இருந்தா தேவலை"...

6 அடி அகலம் 8 அடி நீளம் கட்டில். தூங்கவேண்டியது தானே? "இவ்வளவு பெரிய கட்டில்ல ஒத்தையா படுக்கறமே"ன்னு நெனச்சான்.

ஒரு 19 வயது இளம் பெண் நைலான் புடவ கட்டினு ரெட்டைப் பின்னல் போட்டு இந்த முடி மயிர வெட்டி அப்படி வளச்சினு ஜிலுஜிலுஜிலுன்னு...

"அம்மா, பராசக்தி, நீங்க யாரம்மா"ன்னு வணங்கலாம்...

"இது பூதமோ"ன்னு நெனச்சான் பூதமாப் போச்சு,

"விழுங்கிடுமோ"ன்னு நெனச்சான் விழுங்கிடுச்சி!

கற்பக மரம் வந்தும் அவனுக்கு இடர்...

மூடனுக்கு என்ன வந்தாலும் அவன் முன்னுக்கு வரமாட்டான்.

4 கருத்து(க்கள்)

Blogger Ramprasath சொன்னது�...

Wonderful.

Hope you will continue.

- Ram

 

Blogger சிவா சொன்னது�...

கோபி! எனக்கு ரொம்ப நாள் ஆசை. வாரியார் சொற்பொழிவு கேக்கணும் என்று. இந்த 'மூடனும் கற்பக மரமும்' கேட்டேன். சிரிக்கவும் சிந்திக்கவும் ஒரு அருமையான சொற்பொழிவு. கொடுத்தமைக்கு நன்றி. கேட்க முடியாதவற்களுக்கு எழுத்திலும் கொடுக்கறீங்களே. உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்,
சிவா

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

அருமையான கதை கோபி. அதனை வாரியார் சொல்லக் கேட்கும்படி அமைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.

 

Blogger Paramasivam சொன்னது�...

During my young days, I used to attend his discourses. Now after retirement I could get some cassettes from Saravana Bhavan Hotel. your blogs are really too wonderful to see his other discourses. Thanks a lot.
God bless you.
N.Paramasivam
New Jersey.

 

நீங்க சொல்லுங்க

<< முகப்பு�