This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

வள்ளல் வாரியார்

வாரியார் சுவாமிகளின் தமிழ்ப்பணி, சமயப் பணிகள் குறித்து அறிந்தவர் பலர். அவர் ஆற்றிய சமூகப் பணிகள் குறித்து அறிந்தவர் சிலரே.

அவர் சொற்பொழிவு ஆற்றியதன் மூலமாக ஈட்டிய வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை குழந்தைகளின் கல்வி, ஆதரவற்ற குழந்தைகளின் மறுவாழ்வு உட்பட பல்வேறு சமூக நலப்பணிகளுக்காக கொடையாய் வழங்கியதுடன் அத்தகைய நலத்திட்டங்களில் நேரடியாய் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

தர்மபுரியில் செயல்பட்டு வரும் கிருபானந்த வாரியார் உயர்நிலைப்பள்ளி துவங்க வாரியார் சுவாமிகள் ஒரு தொடர் சொற்பொழிவு நிகழ்த்தி அதில் ஈட்டிய பணத்தை முழுமையாய் அளித்தார்.

அவர் ஆதரவற்ற குழந்தைகளை அரவணைக்க "ராமகிருஷ்ண குடில்" அமைப்புக்காக பல காலம் சொற்பொழிவில் ஈட்டிய சுமார் ரூ.27 லட்சம் பணத்தை அளித்தார்.

பத்தாம் வகுப்பு கல்விக்கு பணம் வேண்டி வந்த மாணவர் ஒருவருக்கு (அந்த மாணவர் வேறு சமயத்தை சார்ந்தவராயினும் கூட) கல்விக்கு உதவித்தொகை அளித்து, நல்ல வேலைஅமைய உதவி செய்து, தன் சொந்த செலவில் திருமணமும் நடத்தி வைத்து, நல்ல வாழ்வு அமையும் வரை ஆதரவளித்து பெற்றோரினும் பரிவு காட்டுவது வாரியாரின் வள்ளல் குணம்.

இது போல அவரின் வள்ளல் உள்ளத்தால் பயன் பெற்றவர்கள் ஏராளம்.

1 கருத்து(க்கள்)

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

நீங்கள் சொல்வது உண்மை கோபி. தொடர்ந்து வாரியார் செய்த அறப்பணிகளைப் பற்றியும் எழுதுங்கள்.

 

நீங்க சொல்லுங்க

<< முகப்பு�