This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

வாரியாரின் நம்பிக்கை

64 ஆம் நாயன்மாராய் புகழப்பட்டவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள்!

அவரின் சொற்பொழிவை ரசிக்காத, புகழாத பெருமக்கள் இருக்கவே முடியாது ..

குறிப்பு வைத்துக் கொள்ளாமலேயே பல மணி நேரம் பேசும் பெருமை மிக்கவர் அவர்!

லட்சக் கணக்கான பாடல்கள் அவருக்கு மனப்பாடம்.

தினம் ஒரு சொற்பொழிவு நடத்தியச் செம்மல் அவர்!

அத்தகு ஆன்மீகப் பெரியார் வாழ்வில் நடந்த ஒரு நம்பிக்கை மிகு சம்பவம்..

வாரியார் சுவாமிகள் தன் சிறு வயதில் வீணை கற்றுக் கொள்ள தன் மாமா வீட்டிற்குச் சென்று இருந்தார். அவரது ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், வாரியார் சுவாமிகளிடம் "காலை எடுத்து விடுவதே நல்லது.. ரூ 1000( அ) ரூ 2000 ஆகும், நான் வேண்டுமானால் ரூ 500 க்கு எடுத்து விடுகிறேன்" என்றார்.

வீட்டுக்கு வந்த வாரியார் சுவாமிகள் யோசிக்கலானார், " ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே ரூ 500 கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த அந்த வேலை உடையோனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று நினைத்து , காலை , மாலை என்று இருவேளைகளில் 1000 முறை 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தை வலம் வந்தார்.

புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.

கிருபானந்தவாரியாரின் நம்பிக்கை எந்த அளவிற்கு அவருக்கு பெருமை சேர்த்துள்ளது பாருங்கள்.

9 கருத்து(க்கள்)

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

அருமையான பதிவு..

ஒருவரின் நம்பிக்கை அவர் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை கொண்டுவரும்.

நம்பிக்கையில் தொடங்கி வாரியார் வாழ்வில் நடந்த சம்பவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள முன்வந்த "நம்பிக்கை" பாசிடிவ் ராமா அவர்களுக்கு நன்றி

வாழ்த்துக்கள்!!

 

Blogger ஜயராமன் சொன்னது�...

வாரியார் என்ற மகத்தான மனிதன் தமிழையும், ஆன்மீகத்தையும் பெருமைப்படுத்தினான்.

அவன் கொவ்வைப் பழ பேச்சை கேட்டு பரவசத்திலும், புன்னகையிலும் ஆழ்ந்து தன்னை மறக்காதவன் எதையோ இழந்தவன்.

வாரியாரின் வாழ்க்கை, கொள்கை, நம்பிக்கை மூன்றையும் இணைத்து வாழ்ந்த பெரு மனிதர்.

அவரிடம் அடைக்கலம் புகுந்த அவர் பெயரை உபயோகப்படுத்தி தாங்கள் வளமாக்கிக்கொண்ட சிறு பிறவிகள் ஏராளம்.
----------------------------
//இங்கே சொல்லப்பட்ட தனிப்பட்ட சில உதாரணங்களை தவிர்த்துள்ளேன் - கோபி//
----------------------------
என்னத்தை சொல்ல....

நன்றி

 

Blogger G.Ragavan சொன்னது�...

வாரியார் நான் கண்களால் காணாத ஞானகுரு. வற்றாத செந்தமிழ்ச் சுனை. எவ்வளவு அழகாக வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள். கால எடுக்குற டாக்டருக்கே ஐநூறு குடுக்கனும்னா.....ரெண்டு காலையும் அந்தக் கால்களில் சத்தையும் குடுத்த முருகனுக்கு....என்ன குடுத்தாலும் தகும். ஆனால் அன்பைக் கொடுத்தாலே போதும்.

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

ஜயராமன்,

உங்கள் பின்னூட்டத்தில் சொல்லப்பட்ட தனிப்பட்ட உதாரணங்களை நீக்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்.

நாம் வாரியாரின் பெருமைகளைப் பற்றி பேசுவோமே...

அவர் பெயரை பயன்படுத்தி முன்னேறி, அவரை மறந்த/அவருக்கு இழிவை ஏற்படுத்தும் தனிப்பட்ட உதாரணங்கள் நமக்கெதற்கு...

நன்றி.

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

ஜி.ரா,

அருமையான விளக்கம்.

 

Blogger ஜயராமன் சொன்னது�...

கோபி அவர்களே, தங்கள் கருத்து புரிகிறது. அதை ஆதரிக்கிறேன்.

பால் பாயசத்தில் பதனீர் கலந்தது போல் அவர்களை பற்றி பேச வேண்டாம் என்கிறீர்கள்.

சரிதான்!!

ஆனால், அவர் வாழ்க்கை எல்லோருக்கும் பாடம். அதில் நாம் கற்க வேண்டியவை ஏராளம். நான் சொன்ன உதாரணங்களிலிருந்து நாம் தெரிந்து கவனமாக இருக்க வேண்டியதும் ஏராளம். அதனால், குறிப்பிட்டேன். ஆனால், ஏன் பூசை வேளையில் இவை....

நன்றி..

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

பாசிடிவ் ராமா அவர்களே. இந்த சம்பவத்தை நாங்கள் அறியக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

 

Blogger VSK சொன்னது�...

வாரியார் சுவாமிகளின் உரையை நேரிலும், எழுத்திலும், ஒளியிலும், ஒலியிலும் கேட்டு மகிழ்ந்தவன், இன்னும் மகிழ்பவன் நான்!

தங்களது இந்தப் பதிவு என்னை மிகவும் பரவசமாக்கியது!

அரசியலுக்கு அங்கே ஒரு 'காமராஜ்' பதிவு போல, இங்கு ஆன்மீகத்திற்கும், 'வாரியார்' பதிவைத் தொடர்ந்து எழுதுமாறு வேன்டுகிறேன்.

தமிழ் மணம் மணக்கட்டும்.!

 

Blogger கால்கரி சிவா சொன்னது�...

பாஸிடிவ் ராமா அவர்களே,

நான் சிறுவயதில் வாரியார் அவர்களின் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை அவர் சொல்ல திருவல்லிகேணியில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் கேட்டிருக்கிறேன்.

வாலி வததிற்கு பிறகு மழைக்காலம் துடங்கும். அது முடிந்தவுடன் சீதையை தேடாலாம் என சுக்ரீவன் கூறுவான். மழைக் காலம் முடிந்துவிடும். ஆனால் சீதையை தேட சுக்ரீவன் முற்பட மாட்டான். அதை நினைவுப் படுத்த லட்சுமணனை ராமன் சுக்ரீவனிடம் தூது அனுப்புவான். அந்த நிகழ்ச்சியை விவரிக்கும் கம்பனின் செய்யுளுக்கு வாரியார் அவர்கள் சுமார் 10 வித மாக பொருள் கூறுவார். அது தனிசுவை. அந்த பேருரையை பதிவிட்டால் மிகுந்த நன்றி உள்ளவனாய் இருப்பேன்.

 

நீங்க சொல்லுங்க

<< முகப்பு�