This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

கயிலாயத்தில் ஒரு நாள்

வாரியார் சொற்பொழிவிலிருந்து..



ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:

குடும்பத்திலே மூத்த பிள்ளை கிட்ட அப்பாவுக்கு பாசம்... கடைசி பிள்ளை கிட்ட அம்மாவுக்கு நேசம்.

அவன் ஜேஷ்ட குமாரன் என்று அப்பா சொல்லுவார்... இது கடைகுட்டின்னு சொல்லுவா அம்மா.

ஒன்னு முதலா பொறக்கனும்... ஒன்னு கடசியா பொறக்கனும்... இடபட்டா பொறந்தா என்னைக்கும் ஆபத்து.

ஒரு மந்திரமே வரும்...

"ஓம் பார்வதீ ப்ரிய நந்தனாய நமஹ"

பார்வதிக்கு ப்ரியமான குழந்தை என்று...

சிவபெருமான் அருகிலே விநாயகர் அமர்ந்தார்... தேவியின் அருகிலே முருகப் பெருமான் அமர்ந்தார்...

அப்படி இரண்டு குழந்தைகளும் வீற்றிருக்கிற பொழுது, விநாயகப் பெருமான் தந்தையாரைப் பார்த்து "அப்பா என் காதை தம்பி கிள்ளினான்".

"முருகா! ஏன் அண்ணா காதை கிள்ளினே?"

"இல்லைப்பா, இவ்வளோ பெரிய காது மொரம் போல இருக்குதே"

அண்ணா மந்திரத்திலே ஒரு மந்திரம்
"ஓம் சூர்ப்பகர்ணாய நமஹ"

பெரிய காதா இருக்குதேன்னு கிள்ளிப் பாத்தேன்னாரு.

"முருகா, பிறவிப் பெருங்கடலிலே வீழ்ந்தவர்களுக்கு உன் அண்ணனாகிய விநாயகனுடைய திருவடியாகிய படகைப் பற்றிக்கொண்டால் சீக்கிரமாக முக்திக்கரையை சேர்வதற்கு காற்று எறிவது அந்த கஜ கர்ணம்".

இது மகத்தான தத்துவம். செவி விசாலமாக இருந்தால் காற்றை எறியும்.

"அப்படியாக உன் அண்ணா பெரிய காதைப் படைத்திருக்கிறான். நீ ஃபிரியான காதை கிள்ளினையே ஏன்டா கிள்ளின?"ன்னாரு.

"அப்பா, நீ என் மேலே கோபிக்கற, அண்ணா என் கண்ணை எண்ணி எண்ணிப் பாக்குறான்".

முருகனுக்கு பதினெட்டுக் கண்கள், அந்த கண்களை விநாயகர் எண்ணினார்.

"விநாயக மூர்த்தீ, ஏன் தம்பி கண்ணை எண்ணினே?".

"அப்பா, அவன் என் தும்பிக்கை நீளத்தை மொழம் போட்டுப் பாக்குறான். என் தும்பிக்கை என்ன வேட்டியா சேலையா மொழம் போட்டு பாக்கறதுக்கு? அதனாலதான் கண்களை எண்ணினேன்"னாரு

இப்படி முருகப் பெருமானும் விநாயகப் பெருமானும் அந்த இளமைப்பருவத்திலே ஒருவரை ஒருவர் அணுகி விளையாடுகிறார்கள்

இதையெல்லாம் பார்த்த சிவபெருமான் உமாதேவியாரை கடைக்கண்ணால் பார்த்து "உன் குழந்தைகளுடைய சேட்டையை பாரு"

இந்தக் கருத்தை சிவப்பிரகாச சுவாமிகள்

அரனவனிடத்திலே ஐங்கரன் வந்து தன் ஐய என் செவியை மிகவும்
அறுமுகவன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும் அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே அண்ணன் என் சென்னியில் விளங்கு கண் எண்ணினான் என
வென்றிடும் பிள்ளையைப் பார்த்து நீ அப்படியும் விகடம் ஏன் செய்தாய் என
மருவும் என் கை நீளம் முழம் அளந்தான் என்ன மயிலவன் நகைத்து நிற்ப
மலையரயன் உதவவரும் உமையவளை நோக்கி நின் மைந்தரைப் பாராய் என
கருதரிய கடலாடை உலகு பெறந்தம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி
கணபதியை அருகணைத்து அகமகிழ்ந்து கொண்ட களிப்புடன் உமைகாக்கவே


என்று சிவப்பிரகாச சுவாமிகள் அற்புதமாகப் பாடுகிறார்.

4 கருத்து(க்கள்)

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

இந்தக் கதையை வாரியார் சுவாமிகள் சொல்லி நேரில் கேட்டிருக்கிறேன். மிக்க நகைச்சுவையான கதையும் பாடலும். :-)

சிவபிரகாச சுவாமிகளின் பாடலையும் எழுத்தில் இட்டிருக்கலாமே. அவ்வளவு கடினமாக இல்லையே?

முதல் குழந்தை மேல் தந்தைக்குப் பாசம்; கடைக்குட்டி மேல் தாயாருக்குப் பாசம் என்று இங்கே சொல்லியிருக்கிறார் வாரியார். இன்னொரு இடத்தில் முதல் குழந்தை மேல் தாய்க்குப் பாசம்; ஏனெனில் தான் மலடி இல்லை என்று நிறுவியதற்காக; கடைக்குட்டி மேல் தந்தைக்குப் பாசம்; ஏனெனில் தான் இன்னும் ஆண்மகன் தான் என்று நிறுவியதற்காக என்று வாரியார் சொல்லுவார். :-)

இன்னொன்றையும் கவனிக்கலாம். உமாதேவியாரால் படைக்கப்பட்டவர் பிள்ளையார். ஐயன் நெற்றிக்கண்களில் இருந்து உதித்தவர் கந்தன். ஆனால் அமரும் போது ஐயன் அருகில் ஐங்கரனும் அம்மை அருகில் ஆறுமுகனும் அமருவதைப் பாருங்கள். :-)

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

குமரன்,

//சிவபிரகாச சுவாமிகளின் பாடலையும் எழுத்தில் இட்டிருக்கலாமே. அவ்வளவு கடினமாக இல்லையே?//

பாடலை கேட்டு எழுதும் போது எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் ஒவ்வொரு வரியும் எங்கு முடிகிறது என தெரியாததாலும் பாடலை தவிர்த்து வந்தேன்.

பாடலை பதித்துள்ளேன். பிழையிருந்தால் சொல்லுங்கள் திருத்திவிடுகிறேன்.

பாசம் குறித்து உங்கள் விளக்கம் அருமை.

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

சிறு பிழைகள் இருந்தன. சரியான பாடலை இங்கே தந்துள்ளேன்.

அரனவனிடத்திலே ஐங்கரன் வந்து தன் ஐய என் செவியை மிகவும்
அறுமுகவன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும் அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே அண்ணன் என் சென்னியில் விளங்கு கண் எண்ணினான் என
வென்றிடும் பிள்ளையைப் பார்த்து நீ அப்படியும் விகடம் ஏன் செய்தாய் என
மருவும் என் கை நீளம் முழம் அளந்தான் என்ன மயிலவன் நகைத்து நிற்ப
மலையரயன் உதவவரும் உமையவளை நோக்கி நின் மைந்தரைப் பாராய் என
கருதரிய கடலாடை உலகு பெறந்தம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி
கணபதியை அருகணைத்து அகமகிழ்ந்து கொண்ட களிப்புடன் உமைகாக்கவே

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

பாடலுக்கு நன்றி குமரன்,

அப்படியே நகலெடுத்து ஒட்டியுள்ளேன்

:-)

 

நீங்க சொல்லுங்க

இடுக்கண் வருங்கால்

பொதுவாக, திருக்குறள் விளக்கங்கள் ஒரு பத்திக்கும் மேலாக இருக்கும். அதிலும் சில விளக்கங்கள் புரிந்து கொள்ள கடினமாய் இருக்கும்.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

என்ற குறளை நாம் அனைவரும் அறிவோம்.

இந்தக் குறளுக்கு நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையான வகையில் வாரியார் விளக்கம் தருகிறார்.

வாரியார் சொற்பொழிவிலிருந்து..



ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:


நம்ம வீட்டுக்கு ஒரு விருந்தாளி வருகிறார்...

அவரைப் பார்த்து நாம் ஏளனமாக சிரித்தால் அவர் நாணி அப்படியே போயிடுவார்...

அது போல நம்மிடம் துன்பங்கள் வருகின்றன...

அந்தத் துன்பங்களைக் கண்டு நாம் சிரிப்போமானால் அந்தத் துன்பங்கள் நாணி கோணி நம்ம விட்டு விலகி போயிடும்.

அதத்தான் திருவள்ளுவர் "இடுக்கண் வருங்கால் நகுக"ன்னார்

துன்பம் வர்றபோது சிரிச்சி மகிழ்ச்சியோட இருக்கனும்.

2 கருத்து(க்கள்)

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

அருமையும் புதுமையுமான விளக்கம். :-)

 

Blogger சிவா சொன்னது�...

'இடுக்கண் வருங்கால் நகுக' விற்கு வாரியார் விருந்தாளியை வைத்து சொல்வது வித்தியாசமாக ரசிக்கும் படி இருக்கிறது. கொடுத்தமைக்கு நன்றி.

 

நீங்க சொல்லுங்க

வாரியாரின் நகைச்சுவை

வாரியார் சுவாமிகள், ஒரு கோயிலில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு வழங்கிக் கொண்டு இருந்தார்.

வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்பவர்கள் மிகக் கவனமாக கேட்பார்கள். ஏனெனில், அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திடீரென்று கேள்விகள் கேட்பார். எனவே, முன்வரிசையில் அமர்பவர்கள் மிக்க கவனத்துடன் இருப்பார்கள்.

சிவபெருமானின் பெருமைகளைச் சொன்னபடி இருந்த கிருபானந்தவாரியார் திடீரென்று ஒரு சிறுவனை எழுப்பி "தம்பி! தருமிக்கு பாட்டு எழுதிக் கொடுத்தது யாரு?" என்று கேட்டார்.

அப்போது திருவிளையாடல் படம் வெளிவந்திருந்த சமயம்.

அந்த பையன் சட்டென்று எழுந்து "சிவாஜி" என்றான்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

வாரியார் அனைவரையும் நோக்கி "ஏன் சிரிக்கிறீங்க? அந்தப் பையன் சரியாத்தான் சொல்லியிருக்கான்"

"நீங்க நேருவை நேருஜி -ன்னு சொல்றீங்க, காந்தியை காந்திஜி -ன்னு சொல்றீங்க, அதைப் போல்தான் இந்தப் பையன் சிவாவை சிவாஜி-ன்னு சொன்னான், வடக்கே ஒருத்தரை உயர்வா மரியாதையாய் அழைக்க 'ஜி' சேர்ப்பது வழக்கம் , அந்த அர்த்தத்தில் சிவாஜின்னு சொல்லி இருக்கான் " என்றாரே பார்க்கலாம்.

கூட்டம் வாரியாரின் நகைச்சுவைத் திறமை கண்டு வழக்கம் போல் அதிசயித்து நின்றது.

8 கருத்து(க்கள்)

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

:-)

சூப்பருங்க...

இதைப் பற்றி ஏற்கனவே படிச்சிருக்கேன்

//வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்பவர்கள் மிகக் கவனமாக கேட்பார்கள். ஏனெனில், அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திடீரென்று கேள்விகள் கேட்பார். எனவே, முன்வரிசையில் அமர்பவர்கள் மிக்க கவனத்துடன் இருப்பார்கள்.//

இந்த வரிகளின் மூலம் சிறு வயதில் நெருக்கியடித்துக் கொண்டு முன்வரிசையில் அமர்ந்து நான் வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்ட நினைவுகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.

விடையை சரியாய்ச் சொல்லும் சிறுவர்களுக்கு வாரியார் பதிப்பகத்தின் சிறு புத்தகங்களை பரிசாய் வழங்குவார்.

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

இந்த நகைச்சுவை நிகழ்ச்சியை நான் கேட்டிருக்கிறேன். :-)

 

Blogger அனுசுயா சொன்னது�...

இதுவரை வாரியார் சொற்பொழிவை கேட்டதில்லை. ஆனால் உங்கள் பதிவு மூலம் அவரின் டைமிங் சென்‍ஸை அறிய முடிந்தது. நல்ல பதிவு

 

Blogger G.Ragavan சொன்னது�...

வாரியாரின் சிறப்புகளில் ஒன்று இது போன்று இடம் பொருள் ஏவலுக்குப் பொருத்தமாகப் பேசுவதும். இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் படித்தாலும் சுவைக்கிறது.

 

Blogger Dubukku சொன்னது�...

மிக அருமையான முயற்சி. பாராட்டுக்கள். இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன்

http://www.desipundit.com/2006/05/12/variyar/

 

Blogger சிவா சொன்னது�...

வாரியார் கதைகளே எனக்கு புதிது தான். நன்றாக இருக்கிறது. கொடுத்தமைக்கு நன்றி.

 

Blogger Ram.K சொன்னது�...

வாரியாரின் விசிறியான எனக்கு அவரைப் பற்றிய இப்பதிவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

வாழ்த்துக்கள்.

நன்றி.

 

Blogger பரஞ்சோதி சொன்னது�...

நான் தண்டுபத்து அம்மன் கோயில் கொடைக்கு சொற்பொழிவாற்ற வந்த வாரியார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி பரிசும், ஆட்டோகிராப்பும் வாங்கினேன்.

 

நீங்க சொல்லுங்க

ரமா உமா கமா

முருகனுடைய மாமிய பரமசிவம் கையைப் புடிச்சாரா?

வாரியார் சொற்பொழிவிலிருந்து..



ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:

மூன்று குழந்தைகள் இருந்து அம்மானை (அம்மானை என்பது ஒரு வகை பாடல்) பாடுவதாக கற்பனை உலகத்திலே சஞ்சரிக்கிறோம்.

ஒரு கொழந்த பேரு ரமா, ஒரு கொழந்த பேரு உமா, ஒரு கொழந்த பேரு கமா, கமான்னா கமலாட்சி

ஒரு கொழந்த பாடுது..

(பாடல்)

அந்த முதல் பெண் ரமா சொல்லுது.

"உமா.. உனக்கு தெரியுமா? பரமசிவம்... கெழம்...
அவர் மகன் முருகன்... முருகனுடைய மாமியார் கைலாசத்துக்கு வந்தார்... இந்த கெழவராகிய பரமசிவம் அவளை கையைப் புடிச்சார். முருகனுடைய மாமியார கையைப் புடிச்சார்"

"ஆஹா... முருகனுடைய மாமிய பரமசிவம் கையைப் புடிச்சாரா?"

(பாடல்)

"எந்தப் பத்திரிக்கையிலும் வர்லை.. கைலாயத்துல இப்படியா? இந்த வயசான சிவபெருமான் மகனுடைய மாமியார கையப் புடிச்சாரா? இது உலகத்துக்கு ஏற்குமா?"

மூன்றாவது பெண் நடை மாற்றிப் பாடுறா... யாரு? கமா...

(பாடல்)

"கந்தனது மாமியாகிய மானை கைப்பற்றியது உலகம் ஏற்குமா?" என்று அந்தப் பெண் கேட்டாள்...

கடைசி பெண் சொன்னாள் "ஏற்கும் என்றே மழு... மழு என்றால் மான்... மழுவதனை ஏந்தி நின்றார் அம்மானை!"

8 கருத்து(க்கள்)

Blogger dondu(#11168674346665545885) சொன்னது�...

பஞ்ச் லைன் குறித்து குழப்பம். மான் எப்படி கந்தனின் மாமியாகும்? வள்ளியின் அன்னையா, தெய்வயானையின் அன்னையா? சீதை பூமாதேவியின் குழந்தை என்பது போல, சகுந்தலை சாகுந்தல பட்சியால் நிழலளிக்கப்பட்டது போல அப்ப்டி ஏதாவது கதை வள்ளியைப் பற்றி உள்ளதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

வாரியார் சொல்வது போலவே, வள்ளியின் அன்னை ஒரு செந்நிற மான் என்கிறது கந்தர் அநுபூதி

இதனாலேயே வள்ளி, செந்நிறக் கூந்தலையும், மான் விழிகளையும் பெற்றிருந்ததாக சொல்வர்.

 

Blogger G.Ragavan சொன்னது�...

திருமகள் மானாக வந்து ஈன்ற குழந்தை வள்ளி என்பதும் ஒரு நம்பிக்கை. ஆகையால்தான் செம்மான் மகள் வள்ளி என்று அருணகிரியும் சொல்கிறார்.

நன்கு நகைச்சுவையாகவும் எளிமையாகப் புரியும்படியாகவும் சொல்லியிருக்கிறார் வாரியார். அற்புதம்.

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

அருமையான அம்மானை. அருமையான விளக்கம். முதலில் மான் எப்படி முருகனின் மாமி என்று புரியவில்லை. கொஞ்சம் யோசித்தப் பின் புரிந்தது. 'செம்மான் மகளைத் திருடும் திருடன்' வரிகள் தெள்ளத் தெளிவாக இதனைச் சொல்கின்றனவே. :-)

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

வள்ளி செந்நிறக் கூந்தலைப் பெற்றிருந்தார் என்பது எனக்குச் செய்தி. இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. அப்போது வள்ளி இங்கே மேற்கு நாடுகளில் 'blond' என்று சொல்வார்களே அந்த வகையைச் சேர்ந்தவரா? திருடன் வந்ததில் தவறில்லை. :-)

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

குமரன்,

எனக்கும் இது புது செய்திதான். இதை விளக்கும் பாடல் ஏதும் உள்ளதா எனத் தெரியவில்லை.

வள்ளி செந்நிறக் கூந்தல், மான் விழிகள் பெற்றிருந்தார் என்று கதிர்காமா வலைத்தளம் சொல்கிறது.

'blonde'ஆ? Redhead இல்லியா?

அது சரி... வள்ளியைப் பற்றி குமரனுக்கே தெரியலைன்னா கோபிக்கு எங்கே தெரியப்போகிறது. :-)

 

Blogger R.DEVARAJAN சொன்னது�...

மழு என்றால் கோடரி போன்ற ஆயுதமல்லவா ?

தேவ்

 

Blogger Unknown சொன்னது�...

http://tamil-ilakiyam.blogspot.in/2006/04/13.html

The above link gives more information on this

 

நீங்க சொல்லுங்க

உண்டேன்! உண்டேன்! உண்டேன்!

வாரியார் சொற்பொழிவிலிருந்து..



ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:

ஔவையார் ஒரு சமயம் மதுரையிலே பாண்டியனுடைய அரண்மனைக்கு திருமணத்துக்கு போனார்.

அங்க இருக்குற காவல்காரர்கள் எல்லாம் விவேகம் இல்லாதவர்கள். ஔவையாரை, பழுத்த ஞானக் கிழவியை, உள்ளே அனுமதிக்கவில்லை.

"போ வெளியே! கெழவிகளுக்கெல்லாம் இங்கே என்ன வேலை!"

அவர் தமிழ் பழம்! ஔவையார் ஒன்னும் சொல்லலை. "நல்லது"ன்னார்.

மாலை நேரத்திலே புலவர்களெல்லாம் ஔவையாரைக் கண்டு "அம்மா! பாண்டியர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனியே சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது?"

"வடை, பாயசம், லாடு, ஜாங்கிரி, குலோப்ஜான், ரொம்ப உயர்வாய் இருந்திருக்கனுமே?"

"நீங்கதானே எங்களுக்கெல்லாம் தலைமை! தமிழ்த் தாய்!" என்று புலவர்கள் கேட்டார்கள்.

ஔவையார் சொன்னார் "உண்டேன்! உண்டேன்! உண்டேன்!"

என்னா உண்ட?

(பாடல்)

"புலவர்களே, பாண்டியராஜா தமிழ் மன்னரு, தமிழ் புலவர்களை ஆதரிக்கின்றவரு, செந்தமிழ் நாட்டுச் செம்மல்! அவர் வீட்டுக் கல்யாணத்துலே நான் எப்படி உண்டேன்?"

(பாடல்)

"மூன்று உண்டேன் ஒன்றே ஒன்று உண்டிலேன்"ன்னாரு.

"நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியினாலே சுருக்குண்டேன், சோறுண்டிலேன்!"

புலவர்களெல்லாம் சிரித்துக் கொண்டார்கள்."ஔவையாருக்கே இந்த கதியா"ன்னு.

8 கருத்து(க்கள்)

Blogger சிவா சொன்னது�...

நன்றி கோபி! காலையிலேயே ஒரு நல்ல சொற்பொழிவு. வாரியார் சொல்லக் கேட்டாச்சு. கொடுத்தமைக்கு நன்றி.

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

அருமையான ஒளவையார் பாடல். அதனை வள்ளல் வாரியார் விளக்கக் கேட்க அருமையாக இருந்தது. மிக்க நன்றி

 

Blogger G.Ragavan சொன்னது�...

ஔவையின் மிக அருமையான பாடல் இது. இந்தப் பேச்சை நான் ஒலிப்பேழையிலேயே கேட்டிருக்கிறேன். இந்த ஒலிப்பேழைகளின் தரம் நாள் படக் கெடுகிறது. இவைகளை மின்னியலாகச் சேர்த்து வைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

உண்டேன் உண்டேன் உண்டேன் என்று தொடங்கும் பாடலில் வழுதி என்று வரும். அதைக் கொண்டுதான் அது பாண்டியன் என்று முடிவு கொள்ள வேண்டும். வாரியார் வாயால் கேட்பது எவ்வளவு சுகம்.

நீங்க சொல்லுங்க - இது ரொம்பச் சிறுசா இருக்கு. தெரியவே மாட்டேங்கி. கொஞ்சம் பெருசாக்குங்களேன்.

 

Blogger ilavanji சொன்னது�...

நன்றிங்க!

எவ்வளவு நாளாச்சு வாரியார் குரல் கேட்டு!

 

Blogger இலவசக்கொத்தனார் சொன்னது�...

வாரியாரின் தமிழ் கேட்க உதவியமைக்கு நன்றி கோபி.

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

//நீங்க சொல்லுங்க - இது ரொம்பச் சிறுசா இருக்கு. தெரியவே மாட்டேங்கி. கொஞ்சம் பெருசாக்குங்களேன். //

பெரிசாக்கிட்டேன்.. :-)

 

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது�...

கோபி!
வாரியாரின் தமிழறிவோடு;இசைப்புலமை எம்மை என்றும் மெய்மறக்கச் செய்வது. எத்தனையோ வருடத்துக்குப் பின் அவர்குரல். அருமை!!!
நன்றி
யோகன் பாரிஸ்

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

நண்பர்களே. அடுத்தப் பதிவு எப்போது வரப்போகிறது?

 

நீங்க சொல்லுங்க