Click here to know how to enable Unicode in your browser
செவ்வாய், மே 30, 2006
செவ்வாய், மே 16, 2006
இடுக்கண் வருங்கால்
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
என்ற குறளை நாம் அனைவரும் அறிவோம்.
இந்தக் குறளுக்கு நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையான வகையில் வாரியார் விளக்கம் தருகிறார்.
வாரியார் சொற்பொழிவிலிருந்து..
2 கருத்து(க்கள்)
- குமரன் (Kumaran) சொன்னது�...
-
அருமையும் புதுமையுமான விளக்கம். :-)
- சிவா சொன்னது�...
-
'இடுக்கண் வருங்கால் நகுக' விற்கு வாரியார் விருந்தாளியை வைத்து சொல்வது வித்தியாசமாக ரசிக்கும் படி இருக்கிறது. கொடுத்தமைக்கு நன்றி.
வெள்ளி, மே 12, 2006
வாரியாரின் நகைச்சுவை
வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்பவர்கள் மிகக் கவனமாக கேட்பார்கள். ஏனெனில், அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திடீரென்று கேள்விகள் கேட்பார். எனவே, முன்வரிசையில் அமர்பவர்கள் மிக்க கவனத்துடன் இருப்பார்கள்.
சிவபெருமானின் பெருமைகளைச் சொன்னபடி இருந்த கிருபானந்தவாரியார் திடீரென்று ஒரு சிறுவனை எழுப்பி "தம்பி! தருமிக்கு பாட்டு எழுதிக் கொடுத்தது யாரு?" என்று கேட்டார்.
அப்போது திருவிளையாடல் படம் வெளிவந்திருந்த சமயம்.
அந்த பையன் சட்டென்று எழுந்து "சிவாஜி" என்றான்.
அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
வாரியார் அனைவரையும் நோக்கி "ஏன் சிரிக்கிறீங்க? அந்தப் பையன் சரியாத்தான் சொல்லியிருக்கான்"
"நீங்க நேருவை நேருஜி -ன்னு சொல்றீங்க, காந்தியை காந்திஜி -ன்னு சொல்றீங்க, அதைப் போல்தான் இந்தப் பையன் சிவாவை சிவாஜி-ன்னு சொன்னான், வடக்கே ஒருத்தரை உயர்வா மரியாதையாய் அழைக்க 'ஜி' சேர்ப்பது வழக்கம் , அந்த அர்த்தத்தில் சிவாஜின்னு சொல்லி இருக்கான் " என்றாரே பார்க்கலாம்.
கூட்டம் வாரியாரின் நகைச்சுவைத் திறமை கண்டு வழக்கம் போல் அதிசயித்து நின்றது.
8 கருத்து(க்கள்)
- தகடூர் கோபி(Gopi) சொன்னது�...
-
:-)
சூப்பருங்க...
இதைப் பற்றி ஏற்கனவே படிச்சிருக்கேன்
//வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்பவர்கள் மிகக் கவனமாக கேட்பார்கள். ஏனெனில், அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திடீரென்று கேள்விகள் கேட்பார். எனவே, முன்வரிசையில் அமர்பவர்கள் மிக்க கவனத்துடன் இருப்பார்கள்.//
இந்த வரிகளின் மூலம் சிறு வயதில் நெருக்கியடித்துக் கொண்டு முன்வரிசையில் அமர்ந்து நான் வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்ட நினைவுகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.
விடையை சரியாய்ச் சொல்லும் சிறுவர்களுக்கு வாரியார் பதிப்பகத்தின் சிறு புத்தகங்களை பரிசாய் வழங்குவார். - குமரன் (Kumaran) சொன்னது�...
-
இந்த நகைச்சுவை நிகழ்ச்சியை நான் கேட்டிருக்கிறேன். :-)
- அனுசுயா சொன்னது�...
-
இதுவரை வாரியார் சொற்பொழிவை கேட்டதில்லை. ஆனால் உங்கள் பதிவு மூலம் அவரின் டைமிங் சென்ஸை அறிய முடிந்தது. நல்ல பதிவு
- G.Ragavan சொன்னது�...
-
வாரியாரின் சிறப்புகளில் ஒன்று இது போன்று இடம் பொருள் ஏவலுக்குப் பொருத்தமாகப் பேசுவதும். இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் படித்தாலும் சுவைக்கிறது.
- Dubukku சொன்னது�...
-
மிக அருமையான முயற்சி. பாராட்டுக்கள். இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன்
http://www.desipundit.com/2006/05/12/variyar/ - சிவா சொன்னது�...
-
வாரியார் கதைகளே எனக்கு புதிது தான். நன்றாக இருக்கிறது. கொடுத்தமைக்கு நன்றி.
- Ram.K சொன்னது�...
-
வாரியாரின் விசிறியான எனக்கு அவரைப் பற்றிய இப்பதிவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
வாழ்த்துக்கள்.
நன்றி. - பரஞ்சோதி சொன்னது�...
-
நான் தண்டுபத்து அம்மன் கோயில் கொடைக்கு சொற்பொழிவாற்ற வந்த வாரியார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி பரிசும், ஆட்டோகிராப்பும் வாங்கினேன்.
செவ்வாய், மே 09, 2006
ரமா உமா கமா
வாரியார் சொற்பொழிவிலிருந்து..
8 கருத்து(க்கள்)
- dondu(#11168674346665545885) சொன்னது�...
-
பஞ்ச் லைன் குறித்து குழப்பம். மான் எப்படி கந்தனின் மாமியாகும்? வள்ளியின் அன்னையா, தெய்வயானையின் அன்னையா? சீதை பூமாதேவியின் குழந்தை என்பது போல, சகுந்தலை சாகுந்தல பட்சியால் நிழலளிக்கப்பட்டது போல அப்ப்டி ஏதாவது கதை வள்ளியைப் பற்றி உள்ளதா?
அன்புடன்,
டோண்டு ராகவன் - தகடூர் கோபி(Gopi) சொன்னது�...
-
வாரியார் சொல்வது போலவே, வள்ளியின் அன்னை ஒரு செந்நிற மான் என்கிறது கந்தர் அநுபூதி
இதனாலேயே வள்ளி, செந்நிறக் கூந்தலையும், மான் விழிகளையும் பெற்றிருந்ததாக சொல்வர். - G.Ragavan சொன்னது�...
-
திருமகள் மானாக வந்து ஈன்ற குழந்தை வள்ளி என்பதும் ஒரு நம்பிக்கை. ஆகையால்தான் செம்மான் மகள் வள்ளி என்று அருணகிரியும் சொல்கிறார்.
நன்கு நகைச்சுவையாகவும் எளிமையாகப் புரியும்படியாகவும் சொல்லியிருக்கிறார் வாரியார். அற்புதம். - குமரன் (Kumaran) சொன்னது�...
-
அருமையான அம்மானை. அருமையான விளக்கம். முதலில் மான் எப்படி முருகனின் மாமி என்று புரியவில்லை. கொஞ்சம் யோசித்தப் பின் புரிந்தது. 'செம்மான் மகளைத் திருடும் திருடன்' வரிகள் தெள்ளத் தெளிவாக இதனைச் சொல்கின்றனவே. :-)
- குமரன் (Kumaran) சொன்னது�...
-
வள்ளி செந்நிறக் கூந்தலைப் பெற்றிருந்தார் என்பது எனக்குச் செய்தி. இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. அப்போது வள்ளி இங்கே மேற்கு நாடுகளில் 'blond' என்று சொல்வார்களே அந்த வகையைச் சேர்ந்தவரா? திருடன் வந்ததில் தவறில்லை. :-)
- தகடூர் கோபி(Gopi) சொன்னது�...
-
குமரன்,
எனக்கும் இது புது செய்திதான். இதை விளக்கும் பாடல் ஏதும் உள்ளதா எனத் தெரியவில்லை.
வள்ளி செந்நிறக் கூந்தல், மான் விழிகள் பெற்றிருந்தார் என்று கதிர்காமா வலைத்தளம் சொல்கிறது.
'blonde'ஆ? Redhead இல்லியா?
அது சரி... வள்ளியைப் பற்றி குமரனுக்கே தெரியலைன்னா கோபிக்கு எங்கே தெரியப்போகிறது. :-) - R.DEVARAJAN சொன்னது�...
-
மழு என்றால் கோடரி போன்ற ஆயுதமல்லவா ?
தேவ் - Unknown சொன்னது�...
-
http://tamil-ilakiyam.blogspot.in/2006/04/13.html
The above link gives more information on this
செவ்வாய், மே 02, 2006
உண்டேன்! உண்டேன்! உண்டேன்!
8 கருத்து(க்கள்)
- சிவா சொன்னது�...
-
நன்றி கோபி! காலையிலேயே ஒரு நல்ல சொற்பொழிவு. வாரியார் சொல்லக் கேட்டாச்சு. கொடுத்தமைக்கு நன்றி.
- குமரன் (Kumaran) சொன்னது�...
-
அருமையான ஒளவையார் பாடல். அதனை வள்ளல் வாரியார் விளக்கக் கேட்க அருமையாக இருந்தது. மிக்க நன்றி
- G.Ragavan சொன்னது�...
-
ஔவையின் மிக அருமையான பாடல் இது. இந்தப் பேச்சை நான் ஒலிப்பேழையிலேயே கேட்டிருக்கிறேன். இந்த ஒலிப்பேழைகளின் தரம் நாள் படக் கெடுகிறது. இவைகளை மின்னியலாகச் சேர்த்து வைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
உண்டேன் உண்டேன் உண்டேன் என்று தொடங்கும் பாடலில் வழுதி என்று வரும். அதைக் கொண்டுதான் அது பாண்டியன் என்று முடிவு கொள்ள வேண்டும். வாரியார் வாயால் கேட்பது எவ்வளவு சுகம்.
நீங்க சொல்லுங்க - இது ரொம்பச் சிறுசா இருக்கு. தெரியவே மாட்டேங்கி. கொஞ்சம் பெருசாக்குங்களேன். - ilavanji சொன்னது�...
-
நன்றிங்க!
எவ்வளவு நாளாச்சு வாரியார் குரல் கேட்டு! - இலவசக்கொத்தனார் சொன்னது�...
-
வாரியாரின் தமிழ் கேட்க உதவியமைக்கு நன்றி கோபி.
- தகடூர் கோபி(Gopi) சொன்னது�...
-
//நீங்க சொல்லுங்க - இது ரொம்பச் சிறுசா இருக்கு. தெரியவே மாட்டேங்கி. கொஞ்சம் பெருசாக்குங்களேன். //
பெரிசாக்கிட்டேன்.. :-) - யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது�...
-
கோபி!
வாரியாரின் தமிழறிவோடு;இசைப்புலமை எம்மை என்றும் மெய்மறக்கச் செய்வது. எத்தனையோ வருடத்துக்குப் பின் அவர்குரல். அருமை!!!
நன்றி
யோகன் பாரிஸ் - குமரன் (Kumaran) சொன்னது�...
-
நண்பர்களே. அடுத்தப் பதிவு எப்போது வரப்போகிறது?
4 கருத்து(க்கள்)
இந்தக் கதையை வாரியார் சுவாமிகள் சொல்லி நேரில் கேட்டிருக்கிறேன். மிக்க நகைச்சுவையான கதையும் பாடலும். :-)
சிவபிரகாச சுவாமிகளின் பாடலையும் எழுத்தில் இட்டிருக்கலாமே. அவ்வளவு கடினமாக இல்லையே?
முதல் குழந்தை மேல் தந்தைக்குப் பாசம்; கடைக்குட்டி மேல் தாயாருக்குப் பாசம் என்று இங்கே சொல்லியிருக்கிறார் வாரியார். இன்னொரு இடத்தில் முதல் குழந்தை மேல் தாய்க்குப் பாசம்; ஏனெனில் தான் மலடி இல்லை என்று நிறுவியதற்காக; கடைக்குட்டி மேல் தந்தைக்குப் பாசம்; ஏனெனில் தான் இன்னும் ஆண்மகன் தான் என்று நிறுவியதற்காக என்று வாரியார் சொல்லுவார். :-)
இன்னொன்றையும் கவனிக்கலாம். உமாதேவியாரால் படைக்கப்பட்டவர் பிள்ளையார். ஐயன் நெற்றிக்கண்களில் இருந்து உதித்தவர் கந்தன். ஆனால் அமரும் போது ஐயன் அருகில் ஐங்கரனும் அம்மை அருகில் ஆறுமுகனும் அமருவதைப் பாருங்கள். :-)
குமரன்,
//சிவபிரகாச சுவாமிகளின் பாடலையும் எழுத்தில் இட்டிருக்கலாமே. அவ்வளவு கடினமாக இல்லையே?//
பாடலை கேட்டு எழுதும் போது எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் ஒவ்வொரு வரியும் எங்கு முடிகிறது என தெரியாததாலும் பாடலை தவிர்த்து வந்தேன்.
பாடலை பதித்துள்ளேன். பிழையிருந்தால் சொல்லுங்கள் திருத்திவிடுகிறேன்.
பாசம் குறித்து உங்கள் விளக்கம் அருமை.
சிறு பிழைகள் இருந்தன. சரியான பாடலை இங்கே தந்துள்ளேன்.
அரனவனிடத்திலே ஐங்கரன் வந்து தன் ஐய என் செவியை மிகவும்
அறுமுகவன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும் அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே அண்ணன் என் சென்னியில் விளங்கு கண் எண்ணினான் என
வென்றிடும் பிள்ளையைப் பார்த்து நீ அப்படியும் விகடம் ஏன் செய்தாய் என
மருவும் என் கை நீளம் முழம் அளந்தான் என்ன மயிலவன் நகைத்து நிற்ப
மலையரயன் உதவவரும் உமையவளை நோக்கி நின் மைந்தரைப் பாராய் என
கருதரிய கடலாடை உலகு பெறந்தம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி
கணபதியை அருகணைத்து அகமகிழ்ந்து கொண்ட களிப்புடன் உமைகாக்கவே
பாடலுக்கு நன்றி குமரன்,
அப்படியே நகலெடுத்து ஒட்டியுள்ளேன்
:-)